Friday, June 11, 2010

Personal Branding Online. 5 Simple Tips To Really Stand Out

Personal branding is one of the most important things you can do for your home business, especially if you are marketing online. If you can find a way to stand out and cut through all the advertising and marketing noise online, you will make your competition obsolete. In today's economic environment, where nothing is certain, it is more important than ever to brand you and your business. This is your most valuable asset and is worth more than any product, service or mission statement. Your brand creates an everlasting impression in the minds of your customers and future prospects.
Below I have created a list of 5 simple, yet very effective, ways you can brand yourself online. Most people are too busy spamming, dumping thousands into advertising and never thinking about this long term strategy of branding. Implement these into your own business and you will see great results.
1. Always Give Your Customers What They Want - The name of the game online is demand and supply. Whatever your target market wants, just make sure you give it to them. For example, my target market is network marketers. I give network marketers everything they want including information on lead generation, industry news, sponsoring tips and even reviews on some of the most popular products and companies in the industry.
2. Just Be Yourself - Uniqueness and authenticity will always conquer the same boring routine and it is within you, just look for it. Every single person on this planet is unique in some kind of way. Let your personality and characteristic traits be known. This is what people want. They want something new and fresh. If you have a sense of humor, let it be known. If you are a good speaker, let it be know.
3. Always Over-Deliver - Always give your customers more than they expected. This makes a major difference in retaining your customers, especially in the long run. A good example to bring this home would be to add extra products or services to existing orders. Say you were selling an eBook online for $19.95. Instead of just giving the customer the eBook, give them an extra bonus like maybe another eBook or anything else they would find useful and is related to the initial product.
4. Provide The Best Possible Customer Service - This is a monumental tip. The whole concept of business is really being able to retain customers. This occurs when you provide unmatched customer service. If you are selling something online, or work with a company who does, ensure that your customer gets whatever they want. Make them feel like they are appreciated and that you are listening. This will increase the value of your brand exponentially. Do you know why people will buy from you over and over again' It's because they like how they feel when they do business with you. You make them feel comfortable and 'taken care of.' Very simple concept, yet so many businesses miss this.
5. Provide A Unique Selling Point - One question you must ask yourself to brand yourself online is, "what can I do differently than anyone else to stand out?" A unique selling point or unique selling proposition (USP) can literally be the difference between you looking like everyone else, or standing out like a pink car in the middle of rush hour. A USP can also promote viral marketing, whereas people will tell their friends and family.
Minus graphics and images for your brand, these 5 tips will help to cultivate a positive image of you in your customers mind and will increase the odds they do repeat business. No matter which online route you take, whether it be banner advertising, sponsored search, social media or content marketing, to acquire new customers and retain existing ones, always keep your customers needs in mind. The money will ALWAYS come when you offer solutions and provide answers.

பெங்களூரில் இந்தியாவின் நீள ’ஹை’ ஹைவே




இது போன வருடம் இந்நேரம் எழுதியது. இதோ இன்று இந்த பாலத்தை (Bangalore Elevated National Highway) திறந்துவிட்டார்கள். பாலு திறக்க வேண்டியது. ம்ம்ம். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கமல்நாத் துவங்கிவைக்க வேண்டியதாகிவிட்டது.



தேசிய நெடுஞ்சாலை அமைந்த இந்தியாவின் நீளமான பாலம் இது தான் என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் திறக்கப்பட்டது - இந்தியாவின் நீளமான பாலம். ஆனால், அது தேசிய நெடுஞ்சாலை அல்ல.



2008 செப்டம்பரில் முடியவேண்டிய பாலம். 2009 ஏப்ரலில் திறக்கப்படும் என்று நீட்டிக்கப்பட்டு ஒரு வழியாக இன்று திறந்துவிட்டார்கள். கட்டி முடிக்க ஆன செலவு அதிகமில்லை. 776 கோடி தான். கூடுதலாக 100 கோடி ஆனது என்கிறார்கள். அவதார் என்கிற மூன்று மணி நேரம் ஓடுகின்ற பொழுதுபோக்கு சினிமா எடுக்கவே 1200 கோடி ஆகும் எனும்போது, நாட்டிற்கு தேவையான சாலைக்கு 800 கோடி என்பது ஓகே.



இந்த பாலத்தில் மடிவாளா தாண்டி பொம்மன்னஹல்லியில் ஏறிவிட்டோம் என்றால் ஒரே மூச்சில் பத்து கிலோ மீட்டர் தள்ளி எலக்ட்ரானிக் சிட்டியில் இறங்கிவிடலாம். ஓசூர் செல்லவேண்டி இருந்தால், இந்த பாலத்திற்கு பிறகும் எங்கும் நிற்க வேண்டியதில்லை. பொம்மசந்த்ரா, சந்தாபுரா, அத்திப்பள்ளி என தொடர்ந்து இருக்கும் பாலங்களால் நிமிடங்களில் ஓசூர் வந்து சேர்ந்துவிடலாம்.



இரவு பாலம் முழுக்க தகதகவென வெளிச்சத்தில் ஒளிர்கிறது. இன்று முதல்நாள் என்பதால், சீரியல் செட் வேறு. ஒரு போஸ்ட்டில் மூன்று விளக்குகள். மார்கழி மாத பனியில், காலை நேரங்களில் இந்த வெளிச்சம் தான் சாலையை காட்டுகிறது.



பெங்களூர் சாலைகள் எல்லா இடங்களிலும் ஏறி ஏறி இறங்கும். அதன் மீது கட்டப்பட்ட இந்த பாலமும் ஏறி ஏறி இறங்குகிறது.



நடுவே பார்க்கிங் செய்ய ஒரு இடம் இருக்கிறது. இன்று அது பிக்னிக் ஸ்பாட் போல இருந்தது. சிலர் நண்பர்களுடனும், சிலர் கேர்ள் பிரண்ட்ஸ்களுடனும் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.



அதிகப்பட்சம் 80 கிலோமீட்டர் ஸ்பீடில் போகலாம் என்கிறார்கள். ஆனால், மக்கள் பறக்கிறார்கள். இந்த படத்தை பாருங்கள்.



தகவல் சொல்ல எலக்ட்ரானிக் டிஸ்ப்ளேகள், வாகன ஓட்டத்தை கண்காணிக்க கேமராக்கள், ஏதேனும் வண்டி நின்று விட்டால் மேலிருந்து கீழிறக்க கிரென் என ஏற்பாடுகள் பல.



டோல் கட்டியே இந்தியன் நொந்துருவான் போல இருக்கே? இந்த பாலத்தில் போகவும் கட்டணம் தான். பைக்கிற்கு பத்து, காருக்கு முப்பது. ஒரு மாசத்திற்கு என்று பாஸ் வாங்கிக்கொள்ளலாம். இது ஸ்மார்ட் கார்டில் வருகிறது. எலக்ட்ரானிக் டோலும் இருக்கிறது. அதாவது உங்கள் காரின் உள்ளே ஒரு சின்ன சாதனத்தை நிறுவிவிடுவார்கள். நீங்கள் கேட் பக்கம் வரும்போதே, கேட்டில் இருக்கும் இன்னொரு சாதனம் உங்கள் காரில் உள்ள சாதனத்துடன் தொடர்புக்கொண்டு அதற்கேற்றாற்போல் கேட்டை திறந்துவிடும்.

மேலும் டீட்டெயில்ஸ் இங்கே.

ஓசூர் போறவங்க, மேலே போனாத்தானே காசு’ன்னு கீழே போனாலும், அத்திப்பள்ளியில் பிடுங்கிவிடுவார்கள். ஆனால், நல்லவேளை அங்கு பைக்கிற்கு கிடையாது.



இன்றும், இன்னும் சில நாட்களும் டோல் கிடையாது. எல்லாரும் ஜாலியா ஏறி இறங்கிட்டு இருக்காங்க. வழக்கமான சாலையாகத்தான் மேலே பாலத்தில் தெரிந்தாலும், ஓரத்தில் போகும்போது, பக்கமிருக்கும் உயர்ந்த கட்டிடங்களால், நாம் இருக்கும் உயரம் உணர்ந்து, ஒரு கிறுகிறு உணர்வு வரத்தான் செய்கிறது.

படங்களை பெரிதாக காண க்ளிக்கவும். ஏதேனும் உயரமான பில்டிங் மேலிருந்தோ, ஹெலிகாப்டரில்(!) இருந்தோ எடுத்தால், இன்னும் அருமையாக வரும்.

ஏர்போர்ட் ரன்வே என்று நினைத்து, பைலட் யாராவது ப்ளைட்டை இங்கு இறக்கிவிடக்கூடாது.

பார்பேக்யு நேஷன்

பார்பேக்யு நேஷன்' (Barbeque Nation) என்றொரு ரெஸ்டாரெண்ட், இந்தியா முழுக்க கடை விரித்திருக்கிறார்கள். பெங்களூரில் மட்டும் மூன்று இடங்களில் இருக்கிறது. இவர்களுடைய ஸ்பெஷல் - க்ரில்டு உணவு என்றழைக்கப்படும் ‘கம்பியில் சொருகி அனலில் காட்டிய’ உணவு வகைகள். சைவ, அசைவ வகைகள் இரண்டையுமே இந்த வகையில் பரிமாறுகிறார்கள். பப்ஃபே சிஸ்டம்.



இது நிறைய ரெஸ்டாரெண்டுகளில் இருப்பது தான். இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், ஒவ்வொரு டேபிளிலும் ஒரு அடுப்பை வைத்திருக்கிறார்கள். நாம் டேபிளில் உட்கார்ந்தவுடன், ஒரு கனல் சட்டியை வைத்து அடுப்பை உருவாக்கிவிடுகிறார்கள். பிறகு, ஒவ்வொரு ஐட்டமாக அதில் வைக்கிறார்கள். எல்லாம் ஏற்கனவே சமைக்கப்பட்டது தான். இருந்தாலும், ஒரு ஷோவுக்காக இப்படி.



பக்கத்திலேயே சின்ன சின்ன கிண்ணங்களில், பல்வேறு சாறுகள் வைத்திருக்கிறார்கள். கூடவே, பெயிண்ட் அடிக்கும் சின்ன ப்ரெஷ்கள். ப்ரெஷ் மூலம் கம்பியில் சொருகி இருக்கும் ஐட்டங்களுக்கு பெயிண்ட் அடித்து, பெயிண்ட் அடித்து சாப்பிடலாம்.

அன்லிமிடட் என்பதால், கம்பிகள் வந்துக்கொண்டே இருக்கிறது. பேபி கார்ன், மஷ்ரூன், காலி ப்ளவர், வெள்ளரி, பன்னீர் போன்றவை சைவப்பிரியர்களுக்கும், சிக்கன், மட்டன், மீன், இறால் போன்றவை அசைவப்பிரியர்களுக்கும் கம்பியில் பரிமாறப்படுகிறது. நண்டு கேட்டால், இப்படி இல்லாமல் தட்டில் கொடுக்கிறார்கள். கூடவே ஒரு கொறடும். (அதான் ஸ்க்ரூ கழட்ட உதவுமே?)



இதிலேயே பாதிப்பேருக்கு வயிறு நிறைந்துவிடும். ஆனால், இதற்கு மேல் தான் மெயின் கோர்ஸ். பிறகு டெசர்ட்ஸ். அதுகளும் இதற்கு சளைத்தல்ல. இருப்பினும் ஸ்பெஷல் - கம்பியில் கோர்த்து வைத்த ஐட்டங்கள் தான்.

வாரயிறுதிகளில் ஹவுஸ்புல்லாகவே இருக்கிறது. புக் செய்யாமல் போக முடியாது. மற்ற நாட்களில் எப்படி என்று தெரியவில்லை.

பில்லை பார்த்தால், அனலில் காட்டிய உணவை விட, பர்ஸ் தீய்ந்து போய் இருக்கும். இருந்தாலும், கொடுக்கிற சாப்பாட்டுக்கு பரவாயில்லை என்கிறார்கள் சிலர்.

ஆனாலும், இப்படி சாப்பிடுவது என்னைப் பொறுத்தவரை அராஜகம் தான். ஆபிஸில் டீம் அவுட்டிங் கூப்பிடுகிறார்கள் என்றால் ஓகே. ஆனால் அப்படி சென்ற பிறகு, உங்கள் வீட்டினரையும் கூட்டி செல்ல தோன்றும்.

மேலும் தகவல்கள் இங்கே.

பின்குறிப்பு - ரொம்ப பிசியாக இருந்ததால் புகைப்படங்கள் அதிகம் எடுக்கவில்லை!

தியேட்டர் - 3

ஏதோ ஒரு மருத்துவ இதழில் படித்தது. டிவி பார்க்கும்போது, எட்டு அடி தூரம் தள்ளி இருந்து பார்க்க வேண்டும் என்று. இல்லாவிட்டால், கண் கெட்டுபோய் விடுமாம். அதேபோல், படுத்துக்கிடந்து டிவி பார்க்கவே கூடாதாம். கண்ணுக்கு ஏதும் ப்ராப்ளம் என்றால், கண்ணாடி போட வேண்டி இருக்குமே, அது நம்ம முகத்துக்கு நல்லா இருக்காதே என்ற பயத்திலேயே, அந்த மருத்துவ அறிவுரைகளை ஆரம்பத்தில் இருந்தே கடைப்பிடித்து வருகிறேன்.

இதனால் பள்ளிக்காலத்தில் தியேட்டர் செல்லும் போது, எவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கிறோமோ, அவ்வளவு நல்லது என்று கடைசி வரிசை இருக்கைக்கு செல்லவே விரும்புவேன். அதே சமயம், முதல் நாள் ரஜினி படம் பார்க்கிறேன் என்று கழுத்து வலிக்க முதல் இருக்கையில் இருந்து பார்த்ததும் உண்டு. மற்றபடி, அந்த நேரத்தில் அதிகம் விரும்பியது கடைசி வரிசைகளை. நிறைய பேர் அப்படிதான். இன்னும்.



ஆனால், நான் மாறிவிட்டேன். தற்போது, உட்காரவிரும்பும் இடம் - 2/3 என்ற அளவில் ஸ்கிரினில் இருந்து தள்ளியிருக்கும் வரிசையில் நடு சீட். ஸ்கேல் எடுத்து அளந்து உக்காரவிட்டாலும், ஓரளவுக்கு இந்த கணக்கில் தான் உட்காருகிறேன். இதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது.

கடைசி வரிசையில் இருந்தால், தலைக்கு மேல் இருக்கும் டிடிஎஸ் ஸ்பீக்கரில் இருந்து வரும் சவுண்ட், அதற்கான எபெக்டை கொடுப்பதில்லை. வரிசையின் ஒரு ஓரத்தில் இருந்தால், அந்த பக்கமிருந்து வரும் சத்தம் சரியான அளவில் வருவதில்லை. இப்படி நடுவே இருந்தால் தான், சரவுண்ட் சவுண்ட்டின் அருமை தெரிகிறது. டிடிஎஸ் வந்த புதிதில், இதையெல்லாம் ரொம்பவும் கவனித்துக்கொண்டு இருப்பேன். சங்கமம் படத்தில் ஒரு கட்டையை பின்னால் எறிவது போன்ற ஒரு காட்சியில், தியேட்டரில் அனைவரும் பின்னாடி திரும்பி பார்த்தார்கள். சில்லறையை சிதறும் காட்சி இருந்தால், வித்யாசாகர் கலக்குவார். சிநேகிதியே, ரன், தூள் - இந்த படங்களில் எல்லாம் சில்லறையை சிதற விட்டு, தியேட்டரை சிலிர்க்க வைத்தார்.

டிடிஎஸ் வந்தபிறகு, தியேட்டர் ஆப்பரேட்டர்கள் தங்கள் திறமையை காட்டும் வாய்ப்பு குறைந்துவிட்டது. முன்பெல்லாம், படம் பார்ப்பதை பெரும் ஆர்வத்திற்குரிய விஷயமாக்குவதற்கு, நான் பார்த்த தியேட்டர்களில் ஆப்பரேட்டர்கள் தங்களால் முடிந்த வேலையை செய்துக்கொண்டிருந்தார்கள். அரசியல் பஞ்ச் வசனம் என்றால், சவுண்டை கரெக்டாக அந்த இடத்தில் கொஞ்சம் கூட்டி வைப்பார்கள். இது அவரவர் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்ப மாறுபடும். எனக்கு பாட்ஷா, கேப்டன் பிரபாகரன், மக்களாட்சி எல்லாம் நினைவுக்கு வருகிறது. அச்சமயம் எழுந்த கைத்தட்டல் எல்லாம் நியாயமாக அந்த ஆப்பரேட்டர்களுக்கு செல்ல வேண்டியது.

பாடல் காட்சி என்றால், நடுவே வரும் இசைக்கு, இரு பக்கமிருக்கும் ஸ்பீக்கரையும் இசைக்க விட்டு விடுவார்கள். பாடகர்களின் குரலுக்கு, ஸ்கீரின் அருகே இருக்கும் ஸ்பீக்கர், இசைக்கு சுற்றி இருக்கும் ஸ்பீக்கர் என பல வித்தைகளை பலமாக காட்டுவார்கள். அதேபோல், சண்டைக்காட்சிகளுக்கு டீஷும், டூஷூம் மட்டும் சைடு ஸ்பீக்கரில் இருந்து வரும். திகில் காட்சிகளைப் பற்றி சொல்லவேண்டாம். சரியான நேரத்தில் சவுண்டை கூட்டி, மக்களை அலறவிடுவார்கள்.

சமீபகாலங்களில் இப்படி எந்தவிதமான வேலைகளையும், அவர்கள் செய்யவேண்டியதில்லாமல் போய்விட்டது. இருந்தும், தங்கள் ஆர்வத்தில் இவ்வாறு செயல்படும் ஆப்பரேட்டர்களும் இருக்கிறார்கள். ஆனாலும், இது தேவையில்லை என்று சொல்லுமளவுக்கு, சவுண்ட் இன்ஜினியரிங், சவுண்ட் மிக்ஸிங் என பல லேட்டஸ்ட் துறைகள் வந்துவிட்டன. ஸ்லம்டாக் மில்லினியர், ஒரு சுமாரான தியேட்டரில் தான் பார்த்தோம். வானத்தில் பறக்கும் விமானத்தை காட்டும் காட்சி ஒன்றில், முன்னால் வந்து உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்த நண்பன், விமானம் பறக்கும் சத்தத்தை கேட்டு, அப்படியே பின்னால் சீட்டில் சாய்ந்தான். அந்த தியேட்டரிலேயே, இப்படி ஒரு சுழல வைக்கும் சவுண்ட் என்பது ஆச்சரியம் தான். ரசூல் பூக்குட்டிக்கு ஏன் ஆஸ்கர் கொடுத்தார்கள் என்று தெரிந்தது.



ஒலி அமைப்பு, ரசிகனை சரியாக வந்து சேர, திரையரங்கின் அமைப்பு, ஸ்பீக்கர் அமைந்திருக்கும் நிலை, ஒலி அளவு போன்றவை முக்கிய காரணிகளாக இருக்கிறது. ரொம்ப பெரிய தியேட்டராக இருந்தாலும் நல்லதல்ல. ரொம்ப சிறியதாக இருந்தாலும் நல்லதல்ல. அதே போல், ஒலியின் அளவு அதிகமாக இருக்கும் போது, நுண்ணிய இசை துணுக்குக்களை கேட்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. போலவே, குறைவாக இருக்கும் போது, படத்தின் மேலான பீல் குறைந்துவிடுகிறது. இப்படி சரி நிலையில் அமைந்திருக்கும் திரையரங்குகள் குறைவு. உங்களுக்கு தெரிந்த சிறந்த திரையரங்குகளை குறிப்பிடலாம்.

நடுவே உட்கார்ந்து பார்ப்பதற்கு, இன்னொரு காரணம் - ரொம்ப தூரத்தில் இருந்து பார்த்தால், ஹோம் தியேட்டர் எபெக்ட் வந்துவிடுகிறது. அப்புறம் எதுக்கு தியேட்டர் வருகிறோம்? பிரமாண்டமா இருக்கவேண்டாம்? இதனாலேயே, சமயங்களில் இன்னும் கொஞ்சம் முன்னால் உட்கார தோணும்.

இந்த விஷயத்தில் சில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் சரியாக இருக்கிறது. திரை பெரிதாக, திரையரங்கின் நீளம் குறைவாக, ஸ்கீரினின் பாதி உயரத்திற்கு சமமான உயரத்தில் அமர்ந்து படம் பார்ப்பது நன்றாகத்தான் இருக்கிறது.

நான் இவ்வளவு சொன்னாலும், இன்னும் சிலருக்கு கடைசி சீட்டும், ஓர சீட்டும் விருப்பமானதாக இருப்பதை கண்டுக்கொண்டு தான் இருக்கிறேன். காரணம் தான் தெரியுமே?!

Thursday, June 10, 2010

சிங்கம் - இன்னொரு சாமி

ஹரி தனது மசாலா பார்முலாவில் இருந்து சிறிதும் அச்சு பிறழாமல் எடுத்திருக்கும் கார காவியம் தான் - சிங்கம். சில நாட்களுக்கு முன்பு எழுதிய ஹரி பற்றிய பதிவைப் பார்த்தால் தெரியும். அப்படியே இருக்கிறது.

கிட்டத்தட்ட அனைத்துக்காட்சிகளுமே, ஏதோவொரு ஹரி படத்தில் பார்த்ததுபோல் தான் இருக்கிறது. ஆரம்பக்காட்சி ‘ஐயா’வை, தொடங்கி இறுதிக்காட்சி ‘ஆறு’, ‘சாமி’ வரை. படத்தின் இரண்டாம் பாதியை விட, முதல் பாதி எனக்கு பிடித்திருந்தது. குறிப்பாக, சூர்யாவுக்காக ஊர் மக்கள் பிரகாஷ்ராஜுடன் சீறும் காட்சி. இதிலும் பேருக்கு சில காட்சிகள் தூத்துக்குடியில் எடுத்துவிட்டு, காரைக்குடி சென்றுவிட்டார். அந்த பாண்டியன் தியேட்டர் எந்த ஊரு?



சூர்யா படம் முழுக்க விறைத்துக்கொண்டு, நரம்பு புடைக்க சுற்றிக்கொண்டிருக்கிறார். ஆக்ரோஷ வசனங்கள் பேசி, மனித சிங்கமாகவே சீறுகிறார். இப்படிபட்டவருக்கு அனுஷ்கா அறிவுரை சொல்லி, வீரம் வருவது கொஞ்சம் ஓவர். சூர்யா-அனுஷ்கா ஜோடிக்காட்சிகளில் அவர்களின் உயர இடைவெளி சமாளிப்பைப் பார்ப்பதிலேயே நேரம் போய்விடுகிறது. அனுஷ்காவின் தங்கையாக வருவது, விஜய் டிவி கனா காலங்களில் வருபவரா?!!!

விவேக் நீண்ட இடைவெளிக்கு பிறகு, சிறிது சிரிக்க வைத்திருக்கிறார். படம் முழுக்க கெட்ட வார்த்தைகளை இவர் பேசாமல், படம் பார்க்க வந்தவர்களை பேச வைத்திருக்கிறார். பத்மஸ்ரீக்கு நல்லா பெருமை சேர்க்கிறார்.

தகவல்கள் சேர்த்து சேர்த்து வசனங்களை அமைத்திருப்பதால், ஹரி நிறைய இடங்களில் கைத்தட்டல் பெற்றார். உதாரணத்திற்கு, பேசியே நிழல்கள் ரவியை ரோட்டுக்கு தள்ளி வரும் காட்சி. ‘ஒன்றரை டன் வெயிட்’ வசனத்தை டிவியில் போடாமல் இருந்திருந்தால், இன்னும் வெயிட்டாக இருந்திருக்கும்.

படமெடுத்துக்கொண்டிருக்கும் போது, இது சாமி மாதிரி இருக்குமா, காக்க காக்க மாதிரி இருக்குமா? என்று கேட்டதற்கு புது மாதிரியாக இருக்கும் என்றார்கள். இது சாமி மாதிரி தான். ஒரு தேவையில்லாத என்கவுண்டர் காட்சி மட்டும் 'காக்க காக்க’வை நினைக்க வைத்தது.

வருஷம் பூரா மசாலா படங்கள் வந்தாலும், ஹரி படங்கள் மட்டும் எப்படி ஒரளவுக்கு எடுபடுகிறது என்று யோசித்து பார்த்தால், அவர் வைக்கும் குடும்பக்காட்சிகள், கொஞ்சம் புத்திசாலித்தனமாக அமைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் காரணங்களாக தெரிகிறது. ஆக்‌ஷன், காமெடி, காதல், குடும்ப செண்டிமெண்ட், பாடல்கள் என்று வழக்கம்போல் எல்லா மசாலாவும் இதிலும் இருக்கிறது.

கிளைமாக்ஸில் ஹீரோவுக்கு கோபம் தலைக்கேறி வில்லனைப் போட்டு தள்ளுவதற்கு காரணமாக, ஹீரோ சைடில் ஒரு கேரக்டரைப் போட்டு தள்ளுவார். இதில் ஹரிக்கு அப்படி மாட்டியிருப்பது - போஸ்.

கிளைமாக்ஸ் பெரிதாக இம்ப்ரஸ் செய்யாவிட்டாலும், மாஸ் எண்டர்டெயின்மெண்ட் ரசிப்பவர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.

மணிரத்னம் -> ராவணன் <- ரஹ்மான்

1983இல் முதல் படத்தை எடுத்த ஒரு இயக்குனர், இன்னமும் மவுசோடு இருக்கிறார் என்றால் அது மணிரத்னமாகத் தான் இருக்கும். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும், எதை கொடுக்க வேண்டும் என்று கூட்டம் யோசித்துக்கொண்டிருக்கும் போது, தனது பிடித்ததை மட்டும் தொடர்ந்து எடுத்து, கொடுத்துக் கொண்டிருப்பவர் மணிரத்னம். போன படத்தின் ரிசல்ட் என்னவாக இருந்தாலும், அடுத்த படத்தின் மேல் எதிர்ப்பார்ப்பு எப்போதுமே எகிறி அடிக்கத்தான் செய்கிறது.
 என்ன காரணமாக இருக்கும்?

ஆரம்பத்தில் இருந்து கொடுத்த தரமான படைப்புகளால் உருவான ப்ராண்ட் நேமை சரிந்துவிடாமல் தக்க வைத்துக்கொண்டிருப்பது. ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என வியாபார வழியில் இருப்பவர்களை விட, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என படைப்பின் உருவாக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த ப்ராண்ட் நேமை செல்வாக்காக வைத்திருப்பது. இதனால் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும், இவர் கூப்பிட்டால் வந்து தலையைக் காட்டிவிடுவார்கள். சில நேரங்களில் படத்தின் வியாபாரத்திற்கு இவர்கள் உதவி விடுவார்கள்.

பட்ஜெட் அதிகமாக இல்லாவிட்டாலும், பிரமாண்ட படங்கள் விற்கும் விலைக்கு விற்பனையாகும் திறன் கொண்டவை இவர் படங்கள். நடிகர்களுக்கு பெரும்பாலும் வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே சம்பளம் கொடுப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிகம் பேசாதவர். ஆனால், படங்களை பார்ப்பவர்கள் அதிகம் பேசும்படி எடுப்பவர். சர்ச்சைக்குள்ளான விஷயங்களை படமாக்குபவர். வரதராஜ முதலியார், மகாபாரத கர்ணன், காஷ்மீர் தீவிரவாதம், பம்பாய் குண்டுவெடிப்பு, கலைஞர்-எம்ஜிஆர் நட்பு, இலங்கை போர், அம்பானி என படத்தை பிரபலமாக்கும் காரணிகளைக் கொண்டு களம் அமைப்பவர்.

எப்போதுமே நடைமுறையில் இருக்கும் சராசரி படமாக்கம் இவரிடம் இருக்காது. பார்ப்பவர்களுக்கு புரிகிறதோ, இல்லையோ, வேறொரு நிலையில் இருக்கும். தயாரிப்புக்காக யாரையும் சார்ந்து இல்லாமல் இருப்பதால், இவருக்கு இது சாத்தியமாகிறது. கதையை ரொம்ப ரகசியமாக வைத்திருக்கும் இயக்குனர். இதனாலேயே, மற்ற இயக்குனர்களின் படக்கதைகளை விட, இவர் படக்கதைகள் சீக்கிரம் வெளியே வந்துவிடும்! சினிமா ரசனையில் மேல்மட்டம் என்றால், இவருடைய படங்கள் எனக்கு பிடிக்கும் என்று சொல்ல வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்திருக்கிறார். (அதற்கும் மேல்மட்டம் போக வேண்டுமென்றால், இவரையே பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும்!)

இவருடைய பலவீனங்கள் என்றால், ஏ மற்றும் கொஞ்சம் பி ஆடியன்ஸ்களை மட்டுமே இவருடைய படங்கள் கவரும் (புரியும்). அதனாலேயே, இவர் உள்ளூர் மார்கெட்டுக்காக படம் எடுப்பதில்லை. எப்படி மசாலா இயக்குனர்களுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறதோ, அதேப்போல் இவருக்கும் ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. ஒரே பாணியில் எடுத்தாலும், அதை இவருடைய ஸ்டைல் என்று சொல்லிவிடுவார்கள். கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் ஒரே மாதிரி இருக்கும். பெரும்பாலும், ஒரே மாதிரி பேசுவார்கள். சினிமா காட்சி ஊடகம்; காட்சிகளின் மூலம் எல்லாவற்றையும் உணர வைக்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் வசனம் குறைவாக இருக்கும். இவருடைய படங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகே வருவதால், இவை எதுவும் படத்தை பாதிப்பதில்லை. ஒரே மாதிரி இருக்கிறது என்று புகார் எழுவதில்லை. (விஜய் கவனிக்க)

உயர்தரம் என்று சொல்லும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது. ’அலைபாயுதே’யில் ஒரு காட்சியில், சரியாக கவனிக்கப்படாமல் கீழே வைத்திருக்கும் மைக் ஒன்று காட்சிக்குள் வந்திருக்கும். இதை ஒரு பேட்டியில், சுட்டிக்காட்டியது - சிம்பு. அதனால், நத்திங் இஸ் பெர்ஃபெக்ட்.

---

ராவணன். இப்போது கிட்டத்தட்ட அனைவருக்கும் கதை தெரிந்திருக்கும். இருந்தாலும், படத்தை பார்க்கும் ஆர்வம் யாருக்கும் இல்லாமல் இல்லை.
அபிஷேக், ஐஸ்வர்யாவுக்காக ஹிந்தி மார்க்கெட்டும், விக்ரமுக்காக தமிழ் மார்க்கெட்டும், ரஹ்மானுக்காக சர்வதேச மார்க்கெட்டும் (ஹி... ஹி...) காத்திருக்கும் படம். இது எல்லாம் படம் பார்த்து ரசிக்க காத்திருப்பவர்கள் பற்றி சொன்னது. இன்னொரு கூட்டம் இருக்கிறது. படத்தைப் பார்த்து நோண்டி நொங்கெடுக்க.

அவர்களுக்கு தோதாக, இயக்குனரும் ஒரு களத்தை எடுத்திருக்கிறார். ரஹ்மான் பாடல் வெளியீட்டின் போது, ஒரு பாடலை பாடி படத்தின் முடிவை சொல்லிவிட்டார். மணிரத்னம் ஏதும் குதர்க்கமாக யோசித்து படமெடுத்திருக்கிறாரோ இல்லையோ, படத்தை பார்த்து அப்படி கருத்துக்கள் வரும். ஜூன் 18க்கு பிறகு, இணையத்தில் சில பக்கங்கள் நாறப்போகிறது.

---

கருவிகள் தவிர்த்து, பாடல்களின் இசை அமைப்பில் ரஹ்மான் ஏதும் புதிதாக இதில் முயற்சி செய்யவில்லை எனக் கருதுகிறேன். பாடல்கள் பெரும்பாலோருக்கு உடனே பிடித்துவிட்டதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். எனக்கும் தான். முந்தைய படமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பாடல்களை, படம் வருவதற்கு முன்பு கேட்டதை விட, பிறகு கேட்டது தான் அதிகம். ஆனால், ராவணன் அப்படியில்லாமல், இப்பொழுதே அதிகம் கேட்கும் பாடல்களாகி விட்டது. வெளியேயும் ஊருக்குள், அதிகம் கேட்கப்படுவதை பார்க்கிறேன்.
 


This Blog
This Blog



மணிரத்னம் -> ராவணன் <- ரஹ்மான்

1983இல் முதல் படத்தை எடுத்த ஒரு இயக்குனர், இன்னமும் மவுசோடு இருக்கிறார் என்றால் அது மணிரத்னமாகத் தான் இருக்கும். ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும், எதை கொடுக்க வேண்டும் என்று கூட்டம் யோசித்துக்கொண்டிருக்கும் போது, தனது பிடித்ததை மட்டும் தொடர்ந்து எடுத்து, கொடுத்துக் கொண்டிருப்பவர் மணிரத்னம். போன படத்தின் ரிசல்ட் என்னவாக இருந்தாலும், அடுத்த படத்தின் மேல் எதிர்ப்பார்ப்பு எப்போதுமே எகிறி அடிக்கத்தான் செய்கிறது.



என்ன காரணமாக இருக்கும்?

ஆரம்பத்தில் இருந்து கொடுத்த தரமான படைப்புகளால் உருவான ப்ராண்ட் நேமை சரிந்துவிடாமல் தக்க வைத்துக்கொண்டிருப்பது. ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என வியாபார வழியில் இருப்பவர்களை விட, நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என படைப்பின் உருவாக்கத்தில் இருப்பவர்களிடம் அந்த ப்ராண்ட் நேமை செல்வாக்காக வைத்திருப்பது. இதனால் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும், இவர் கூப்பிட்டால் வந்து தலையைக் காட்டிவிடுவார்கள். சில நேரங்களில் படத்தின் வியாபாரத்திற்கு இவர்கள் உதவி விடுவார்கள்.

பட்ஜெட் அதிகமாக இல்லாவிட்டாலும், பிரமாண்ட படங்கள் விற்கும் விலைக்கு விற்பனையாகும் திறன் கொண்டவை இவர் படங்கள். நடிகர்களுக்கு பெரும்பாலும் வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே சம்பளம் கொடுப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

அதிகம் பேசாதவர். ஆனால், படங்களை பார்ப்பவர்கள் அதிகம் பேசும்படி எடுப்பவர். சர்ச்சைக்குள்ளான விஷயங்களை படமாக்குபவர். வரதராஜ முதலியார், மகாபாரத கர்ணன், காஷ்மீர் தீவிரவாதம், பம்பாய் குண்டுவெடிப்பு, கலைஞர்-எம்ஜிஆர் நட்பு, இலங்கை போர், அம்பானி என படத்தை பிரபலமாக்கும் காரணிகளைக் கொண்டு களம் அமைப்பவர்.

எப்போதுமே நடைமுறையில் இருக்கும் சராசரி படமாக்கம் இவரிடம் இருக்காது. பார்ப்பவர்களுக்கு புரிகிறதோ, இல்லையோ, வேறொரு நிலையில் இருக்கும். தயாரிப்புக்காக யாரையும் சார்ந்து இல்லாமல் இருப்பதால், இவருக்கு இது சாத்தியமாகிறது. கதையை ரொம்ப ரகசியமாக வைத்திருக்கும் இயக்குனர். இதனாலேயே, மற்ற இயக்குனர்களின் படக்கதைகளை விட, இவர் படக்கதைகள் சீக்கிரம் வெளியே வந்துவிடும்! சினிமா ரசனையில் மேல்மட்டம் என்றால், இவருடைய படங்கள் எனக்கு பிடிக்கும் என்று சொல்ல வேண்டும் என்ற நிலையை கொண்டு வந்திருக்கிறார். (அதற்கும் மேல்மட்டம் போக வேண்டுமென்றால், இவரையே பிடிக்கவில்லை என்று சொல்ல வேண்டும்!)

இவருடைய பலவீனங்கள் என்றால், ஏ மற்றும் கொஞ்சம் பி ஆடியன்ஸ்களை மட்டுமே இவருடைய படங்கள் கவரும் (புரியும்). அதனாலேயே, இவர் உள்ளூர் மார்கெட்டுக்காக படம் எடுப்பதில்லை. எப்படி மசாலா இயக்குனர்களுக்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறதோ, அதேப்போல் இவருக்கும் ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. ஒரே பாணியில் எடுத்தாலும், அதை இவருடைய ஸ்டைல் என்று சொல்லிவிடுவார்கள். கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் ஒரே மாதிரி இருக்கும். பெரும்பாலும், ஒரே மாதிரி பேசுவார்கள். சினிமா காட்சி ஊடகம்; காட்சிகளின் மூலம் எல்லாவற்றையும் உணர வைக்க வேண்டும் என்ற பிடிவாதத்தால் வசனம் குறைவாக இருக்கும். இவருடைய படங்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகே வருவதால், இவை எதுவும் படத்தை பாதிப்பதில்லை. ஒரே மாதிரி இருக்கிறது என்று புகார் எழுவதில்லை. (விஜய் கவனிக்க)

உயர்தரம் என்று சொல்லும் போது ஒன்று நினைவுக்கு வருகிறது. ’அலைபாயுதே’யில் ஒரு காட்சியில், சரியாக கவனிக்கப்படாமல் கீழே வைத்திருக்கும் மைக் ஒன்று காட்சிக்குள் வந்திருக்கும். இதை ஒரு பேட்டியில், சுட்டிக்காட்டியது - சிம்பு. அதனால், நத்திங் இஸ் பெர்ஃபெக்ட்.

---

ராவணன். இப்போது கிட்டத்தட்ட அனைவருக்கும் கதை தெரிந்திருக்கும். இருந்தாலும், படத்தை பார்க்கும் ஆர்வம் யாருக்கும் இல்லாமல் இல்லை.



அபிஷேக், ஐஸ்வர்யாவுக்காக ஹிந்தி மார்க்கெட்டும், விக்ரமுக்காக தமிழ் மார்க்கெட்டும், ரஹ்மானுக்காக சர்வதேச மார்க்கெட்டும் (ஹி... ஹி...) காத்திருக்கும் படம். இது எல்லாம் படம் பார்த்து ரசிக்க காத்திருப்பவர்கள் பற்றி சொன்னது. இன்னொரு கூட்டம் இருக்கிறது. படத்தைப் பார்த்து நோண்டி நொங்கெடுக்க.

அவர்களுக்கு தோதாக, இயக்குனரும் ஒரு களத்தை எடுத்திருக்கிறார். ரஹ்மான் பாடல் வெளியீட்டின் போது, ஒரு பாடலை பாடி படத்தின் முடிவை சொல்லிவிட்டார். மணிரத்னம் ஏதும் குதர்க்கமாக யோசித்து படமெடுத்திருக்கிறாரோ இல்லையோ, படத்தை பார்த்து அப்படி கருத்துக்கள் வரும். ஜூன் 18க்கு பிறகு, இணையத்தில் சில பக்கங்கள் நாறப்போகிறது.

---

கருவிகள் தவிர்த்து, பாடல்களின் இசை அமைப்பில் ரஹ்மான் ஏதும் புதிதாக இதில் முயற்சி செய்யவில்லை எனக் கருதுகிறேன். பாடல்கள் பெரும்பாலோருக்கு உடனே பிடித்துவிட்டதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். எனக்கும் தான். முந்தைய படமான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பாடல்களை, படம் வருவதற்கு முன்பு கேட்டதை விட, பிறகு கேட்டது தான் அதிகம். ஆனால், ராவணன் அப்படியில்லாமல், இப்பொழுதே அதிகம் கேட்கும் பாடல்களாகி விட்டது. வெளியேயும் ஊருக்குள், அதிகம் கேட்கப்படுவதை பார்க்கிறேன்.



அனைத்து தரப்பு உசிரையும் போக வைத்திருக்கிறது - கார்த்திக் பாடியிருக்கும் ‘உசிரே போகுதே’ பாடல். வேகமாக நிறைய பேர் மொபைலில் காலர் ட்யூனாகி இருக்கிறது. பாடல் வரிகளை விவாதிக்கும் வழக்கம், நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பிருக்கிறது. மணிரத்னம் - வைரமுத்து - ரஹ்மான் கூட்டணியிலேயே இது அதிகம் நிகழுகிறது. மணிரத்னம் முழு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை வழங்க, ரஹ்மான் இசை நல்ல ரீச் கொடுக்க, வைரமுத்துவின் வரிகள் இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

அடி தேக்கு மர காடு பெருசுதான்
சின்ன தீக்குச்சி ஒசரம் சிருசுதான்
ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி
கரும் தேக்குமர காடு வெடிக்குதடி!


அடுத்ததாக, என்னை கவர்ந்த பாடல் - ‘காட்டு சிறுக்கி’. பாடல் வரிகள் அனுராதா ஸ்ரீராமின் குரலில் வழிந்தோட, சங்கர் மகாதேவர் எஸ்.பி.பி ஸ்டையில் கணீரென்று பாட, ரஹ்மானின் இசையை நீங்கள் நல்ல சுற்று அமைப்புடன் இருக்கும் ஸ்பீக்கர்களில் கேட்க வேண்டும். திரும்ப, திரும்ப கேட்க தூண்டும்.

ஏர்கிழிச்ச தடத்துவழி
நீர் கிழிச்சு போவது போல்
நீ கிழிச்ச கோட்டு வழி
நீளுதடி எம்பொழப்பு


ஸ்ரேயா கோஷலின் ‘கள்வரே’ பாடல், தமிழ் படம் என்பதற்கு சம்பந்தமில்லாமல் தூய தமிழில் இருக்கிறது!!! இதனால் தான் என்னவோ, டப்பிங் பட பாடல் போல இருக்கிறது. இசையும் அதற்கேற்ப ஹிந்தி ஸ்டைலிலேயே இருக்கிறது. ஆனாலும், ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான பாடல்.

வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள் தமிழுக்கு தெரிகின்றதே...
வலிமிகும் இடங்கள், வலிமிகா இடங்கள் தங்களுக்கு தெரிகின்றதா?...


வைரமுத்து இப்படி அவ்வப்போது சினிமா பாடல்கள் மூலம் தமிழ் இலக்கணம் சொல்லித்தருவார். ஜீன்ஸ் பாட்டு கேட்டுத்தான், சிலருக்கு ‘இரட்டைக் கிளவி’ புரிந்தது.

ரஹ்மான் இசையில், நிறைய பீட்ஸ்களுடன் உடைய பாடல்கள் கொண்ட ஆல்பம் வந்து நாளாகிவிட்டது. இதில் ‘கள்வரே’ பாடலைத் தவிர, மற்ற அனைத்துமே அதிரடி பாடல்கள். ‘கெடா கெடா கறி அடுப்புல கெடக்கு’, ‘கோடு போட்டா’, ‘வீரா’ என அனைத்துமே ‘காட்டுத்தனமான’ பாடல்கள். அதாவது, காடு என்ற உணர்வை எங்காவது தெளிக்கும் பாடல்கள்.

வைரமுத்து ஸ்பெஷலாக தந்த பாடல் வரிகளுக்கு, ரஹ்மானும் ஸ்பெஷல் இசையை கொடுத்திருக்கிறார். மணிரத்னம் அதை எப்படி திரையில் சிறப்பாக தருகிறார் என்று இன்னமும் இரு வாரங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். வசனகர்த்தாவை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது.

வேலை வேணுமா வேலை!!!

வேலை தேடுபவர்களுக்காக சில குறிப்புகள்.

இவை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இவை அனைத்தையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால், நீங்கள் விரும்பும் வேலை கண்டிப்பாக சாத்தியம்.



This Blog
This Blog





வேலை வேணுமா வேலை!!!

வேலை தேடுபவர்களுக்காக சில குறிப்புகள்.

இவை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இவை அனைத்தையும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தினால், நீங்கள் விரும்பும் வேலை கண்டிப்பாக சாத்தியம்.



1) முதலில் என்ன மாதிரியான வேலையை எதிர்பார்க்கிறீர்கள் என்று யோசித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலைக்கும், விரும்பும் வேலைக்கும் அடிப்படை தொடர்பு இருக்கவேண்டும்.

2) தெளிவாக உங்களைப் பற்றிய குறிப்புகளை (Resume) தயார் செய்துக்கொள்ளுங்கள். கூடவே, கவர் லெட்டரும்.

3) ஒன்றிரண்டு முன்னணி வேலைவாய்ப்பு இணையத்தளங்களில் பதிவு செய்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்கு, Naukri, Monster.

4) நிறுவனங்கள் இத்தளங்களில் தேடும் போது, குறிச்சொற்கள், அனுபவ வருடங்கள் வைத்தே தேடுவார்கள். குறிச்சொற்கள் (Keywords) உங்களுக்கேற்ப சரியாக அமைத்துக் கொள்வது முக்கியம்.

5) ஒவ்வொரு முறை நீங்கள் இத்தளங்களில் நுழையும்போதும், நீங்கள் ரிசண்ட் ஆக்டிவ் உறுப்பினர் ஆகிறீர்கள். நிறுவனங்கள் தேடும்போது, முதன்மை பெறுகிறீர்கள். அதனால், அவ்வபோது இத்தளங்களை பார்ப்பது மட்டும் போதாது. அடிக்கடி செல்லுங்கள்.

6) நன்றாக படித்துவிட்டு தான் விண்ணப்பிப்பேன் என்று நினைத்தால், நேர விரயம் தான் ஆகும். வேலைத்தேட ஆரம்பித்துவிட்டீர்கள் என்றால், உடனே விண்ணப்பிக்கவும். அழைப்புகள் வந்து, தேர்வுக்கு செல்லும்போது தான் படிக்கவும் தோன்றும். அச்சமயம் படிப்பது தான், மூளையிலும் ஆழப்பதியும்.

7) அதே சமயம், நிறுவனத்தில் இருந்து என்ன சொல்லி அழைத்தாலும், சிறிது கூட தயார் செய்து கொள்ளாமல் போகக்கூடாது. உதாரணத்திற்கு, HR இண்டர்வியூ என்று சொல்லி விட்டு, டெக்னிக்கல் இண்டர்வியூ வைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. எதற்கும் தயாராக இருக்கவும்.

8) படிக்கும் போது, சிறுக்குறிப்புகளாக எழுதி வைத்துக்கொள்ளவும். தேர்வுக்கு முன்பு கிளம்பும் போது, மேலோட்டமாக பார்த்துவிட்டு செல்ல உதவும்.

9) நேரத்திற்கு செல்லவும். கிளம்பும் முன்பு, தேவையானவை எல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொள்ளவும். Resume இரண்டு-மூன்று நகல்கள் எடுத்துகொள்ளவும். ஒன்றிரண்டுக்கு மேற்பட்ட தேர்வாளர்கள் இருக்கும்போது, கொடுக்க உதவும்.

10) ஒவ்வொரு தேர்வின் போதும், இந்த வேலை கண்டிப்பாக கிடைத்துவிட வேண்டும் என்ற நினைப்பு நல்லதுதான். ஆனால், அதுவே ரொம்ப உறுதியாக இருந்துவிட்டால், பின்பு தேர்வு முடிவு சரிவராபட்சத்தில் சோர்வடைய செய்யும். அடுத்தடுத்த தேர்வுகளைப் பாதிக்கும். அதனால், ஒவ்வொரு தேர்வையும் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்ளவும்.

11) அனுபவங்களை பதிவு செய்து வைக்கவும். இதற்கென, ஒரு குறிப்பேடு வைத்துக்கொள்ளவும். ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடனும், என்ன கேள்விகள் கேட்கப்பட்டன என்று குறித்து வைத்துக் கொள்ளவும். உடனே குறித்து வைத்துக்கொண்டால், நிறைய கேள்விகள் ஞாபகத்தில் இருக்கும். தேதிவாரியாக, நிறுவனம்வாரியாக குறித்துக்கொள்ளவும்.

12) தேர்வின் போது, தெரியாமல் பதிலளிக்க முடியாமல் போன கேள்விக்கான பதிலை, பிறகு படித்து தெரிந்துக்கொள்ளவும். அடுத்து வேறு ஏதெனும் தேர்வில், அதே கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் போனால், நீங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம். அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ளவும்.

13) சிரித்த முகத்துடன், தேர்வாளர்கள் உடன் அறிமுகப்படுத்திக்கொள்ளவும். இறுதிவரை சகஜமாக இருக்கவும்.

14) கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் பெரும்பாலும் நமது அனுபவக்குறிப்புகளில் இருந்தும், நாம் என்ன சொல்கிறோம் என்பதிலிருந்தும் தான் கேட்கப்படும். அதனால், resumeஇல் இருக்கும் சொற்கள் அனைத்திற்கும் உங்களிடம் பதில் இருக்க வேண்டும். அதேபோல், என்ன சொல்கிறோம் என்பதை யோசித்து சொல்லவும். அடுத்த கேள்வி, நீங்கள் சொல்வதில் இருந்தே எழும்பலாம்.

15) கேள்விகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். சுத்தமாக தெரியாத கேள்விக்கு, தப்பான பதில் சொல்லி மாட்டிக்கொள்ள வேண்டும். தெரியாதவற்றை தெரியாது என்றே காரணத்துடன் சொல்லிவிடலாம். (12 பாயிண்ட் பார்க்கவும்.)

16) நேர்முக தேர்வு முடிவில், உங்களுக்கு அந்த நிறுவனம் பற்றி, நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலை பற்றி, ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கவும்.

இக்குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருந்து, ஏதேனும் குறிப்பில் மேலும் தகவல்கள் தேவையெனில் சொல்லுங்கள். மேலும் தகவல்கள் அளிக்க முயலுகிறேன்.

நீங்கள் விரும்பும் வேலையை விரைவில் அடைய வாழ்த்துக்கள்!!!