Saturday, June 12, 2010

NH - 7

ரோடு போடும் சமயங்களில், சிறு வயதில் நடந்து சென்றாலும் சரி, சைக்கிளில் சென்றாலும் சரி, சிரமமாக இருக்கும். எல்லோருக்கும் தொந்தரவு கொடுத்தபடி, இதெல்லாம் எதற்கு என்றவாறு பார்த்தபடி ஓரத்தில் போவேன். கல்லு, மண்ணு, ஜல்லி, தார் என்று மாற்றி மாற்றி ஒரு அடி உயரத்திற்கு போடுவதை பார்க்கும்போது, இப்படி மெனக்கெடுவது அவசியமா என தோன்றும். சிவில் இன்ஜினியரிங்கில் விதவிதமான சாலைகளை பற்றி படித்தபோதுக் கூட, இது தோன்றுவதுண்டு. மனிதனோ, வாகனமோ போவதற்கு ஒரு பாதை. அதற்கு ஏன் இவ்வளவு டகால்டி வேலைகள் என்று.

---

முன்பு தென் தமிழகத்தில் இருந்து ரயிலில் பெங்களூர் வரவேண்டும் என்றால் பிற்பகலில் கிளம்பவேண்டும். இப்பொழுதும் அப்படித்தான். சாயங்காலம் கிளம்பினால், காலை வந்து சேருவோம். அதேப்போல், பெங்களூரில் இருந்து இரவு கிளம்பினால், மறுநாள் மதியம் வந்து சேருவோம். பெரும்பாலும், சாலைவழி பயணம் இதை விட அதிக நேரம் எடுப்பதாகத்தான் இருக்கும். இப்படி நேரம் எடுப்பதால், ஊருக்கு போய் வருவது பெரிய விஷயமாக, பெரும் திட்டத்திற்குரிய விஷயமாக இருக்கும்.

சமீபகாலங்களில், தொடுக்கப்படும் நெடுஞ்சாலை இணைப்புக்கள், பயணத்திட்டங்களை எளிமையாக்கி இருக்கிறது.

---

சராசரி மைலெஜ் கொடுக்கும் காரில் நாலு பேர் பயணம் செய்தால், ரயிலில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வதற்கான செலவைவிட கொஞ்சமே அதிகம் ஆகும். நான்கு வழி சாலையில், நீங்கள் ஆக்ஸிலெட்டரை அழுத்தி மிதிக்காவிட்டாலும், வண்டி தானே நூறில் செல்லும். எதிரில் வண்டி வரும் பிரச்சினையும், அதற்கான ஆழ்ந்த கவனமும் எச்சரிக்கையுணர்வும் தொடர்ச்சியாக தேவையில்லை. முன்னால் செல்லும் வண்டியை முந்தினாலும், முந்தும் வண்டிக்கு வழி விட்டாலும் போதும். எண்பதில் இருந்து நூறு கிலோமீட்டர் மணி வேகத்தில் சென்றாலும், அதிகாலை பெங்களூரில் கிளம்பி, மதிய உணவிற்கு திருநெல்வேலிக்கோ, தூத்துக்குடிக்கோ சென்று விடலாம்.

மதிய உணவிற்கு என்ன வேண்டுமென்று போகும்போது சொன்னால் போதும். போய் சேரும்போது, வீட்டில் லஞ்ச் ரெடியாக இருக்கும்.

போகும் போது, காலையிலேயே கிளம்புவது போல், திரும்பி வரும்போது, மதியம் கிளம்பலாம். வீட்டில் சண்டே ஸ்பெஷல் சிக்கனோ, மட்டனோ ஒரு கட்டு கட்டுவிட்டு, கூடவே ஒரு பார்சலும் கட்டிவிட்டு வந்தால், இரவு ஒன்பது-பத்து மணிக்கு வீடு திரும்பவும், கட்டிக்கொண்டு வந்த பார்சலை சாப்பிட்டுவிட்டு கவுந்தடித்து உறங்கவும் சரியாக இருக்கும்.



பெங்களூர் - சென்னை, திருச்சி - மதுரை, மதுரை - கோவை என அனைத்து முக்கிய வழித்தடங்களும் வேக வழித்தடங்களாகிவிட்டது.

---

பெங்களூரில் இருந்து மதுரைக்கு சாலை வழியாக சென்றால் 210 ரூபாய் ஆகிறது. பஸ் டிக்கெட்டா என்றால் இல்லை. சாலையை பயன்படுத்த மட்டும் சுங்க சாவடிகளில் 210 ரூபாய் பிடுங்கிறார்கள். அத்திப்பள்ளி (20), கிருஷ்ணகிரி (25), தருமபுரி (45), சேலம் (29), வேலஞ்செட்டியூர் (54), கொடை ரோடு (37) என்று காருக்கு மதுரை வரை செமயாக வசூல் செய்கிறார்கள். அதற்கு பிறகு, எங்கும் இல்லை. இருந்த டோல் கேட்களும் நீக்கப்பட்ட தடயங்கள் சில இடங்களில் தெரிகிறது.

ஒரு விஷயம் புரியவில்லை. எதற்கு இந்த வரி கட்டுகிறோம் என்றால், இந்த சாலைகளை போட்டது தனியார் நிறுவனங்கள். அவர்கள் போட்ட காசை எடுப்பதற்கு, நாம் பணம் செலுத்துகிறோம் என்கிறார்கள். அப்புறம் எதற்கு இந்த சாலைகளில் ஆங்காங்கே மன்மோகன் சிங், சோனியா படங்களை வைத்திருக்கிறார்கள்?. போனமுறை, வாஜ்பாய். இதில் என்ன சாதனை இருக்கிறது? ரோடு போட்டு, கீழே லைன் போடுகிறார்களோ இல்லையோ, மறக்காமல் இவர்களது படத்தை எல்லா இடங்களிலும் வைத்திருக்கிறார்கள். இப்படி படம் காட்டுவதற்காகவே, கொஞ்சம் மானியமோ, பங்கோ கொடுத்தாலும் கொடுத்திருப்பார்கள்.

---

கல்லூரி படிக்கும் போது, மும்பை டூர் போனபோது, லோனாவாலா ஹைவேயில் சென்றோம். எங்கேயும் நிறுத்தக்கூடாது, எண்பது கிலோமீட்டர் வேகத்தில் செல்லவேண்டும், ஜீப்பில் தொடர்ந்து கண்காணிக்கும் ஹைவே பேட்ரோல் என ஆச்சரியமாக இருந்தது.

இந்திய சாலைகளில் எண்பது கிலோமீட்டர்தான் அதிகாரபூர்வ அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் என நினைத்திருந்தேன். இப்ப, நம்ம ஊருக்குள்ளயே, 100 கிலோமீட்டர் என்ற போர்டுகளை பார்க்கும் போது, இன்னும் ஆச்சரியமாக இருந்தது. அதைவிட, ஆச்சரியம். இந்த சாலையின் நடுவில், எதையும் கண்டுக்கொள்ளாமல், தைரியமாக, சைக்கிளில் எதிர்திசையில் வரும் நம்மூர் பெரியவர்கள்.

---

திரும்பி வரும்போது, மதுரை வரை சென்னைக்கு போகவும் இதுதான் வழி என்றாலும், வழி காட்டும் போர்டுகளில் எல்லாம் மதுரையும், பெங்களூருமே இருந்தது. சென்னை சொற்ப இடங்களில் தான். காரணம், இது NH - 7.



இந்தியாவில் NH - 7 நெடுஞ்சாலை ஸ்பெஷலானது. இது தான் இந்தியாவின் நீளமான நெடுஞ்சாலை. வாரணாசியில் இருந்து கன்னியாக்குமரி வரை செல்லும் சாலை.


---

லிங்குசாமி, ’பையா’ படத்தில் இன்னொன்று செய்திருக்கலாம். பெங்களூரில் இருந்து மும்பை சென்றதற்கு பதிலாக, கன்னியாக்குமரி சென்றிருக்கலாம். சேலம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி என்று போகும் ரூட்டிற்கு ஏற்ப கமகமவென மசாலா சேர்ந்திருக்கும்.

ம். கொஞ்ச நாள் கழிச்சு, வேற யாராச்சும் ட்ரை பண்ணுங்க’ப்பா.

---

பை-பாஸ் சாலைகள் எல்லா இடங்களில் இருந்தாலும், ரோடு போட்டு ரொம்ப நாள் ஆன காரணத்தாலோ என்னவோ, சாலைகள் பை-பாஸ் போல் தெரியவில்லை. உதாரணத்திற்கு, சேலம். மதுரையிலும், பழைய பை-பாஸ் சாலை இப்படித்தான். ஜன நெரிசலொடு இருக்கும். தற்போது பரவாயில்லை. கூடியவிரைவில், ஊர் தற்போதைய பை-பாஸ் சாலைவரை விரிவடைந்துவிடும் என நினைக்கிறேன்.

பெங்களூர் அவுட்டர் ரிங் ரோடும் அது போலத்தான். பயன்பாட்டிற்கு வந்து சில காலத்திலேயே, இன்னர் ரிங் ரோடாக மாறிவிட்டது.

---

’நோ ப்ராப்ளம்’ என்றொரு சிறுகதை. சுஜாதா எழுதியது. ஜெர்மனி சாலை ஒன்றில் பயணிக்கும் கதை. அந்த சாலையை பற்றி, அங்கு இருக்கும் வசதிகள் பற்றி, சாலையில் ஓடும் காரைப் பற்றி, மறக்காமல் காரை ஓட்டும் பெண்ணை பற்றி எல்லாம் சுஜாதா விவரித்து எழுதியிருப்பார்.

பயணத்தின் போது, காரில் செல்பவர்கள் வழியில் ஒரு விபத்தை பார்ப்பார்கள். அந்த இடத்தை நெருங்கும் முன்பே, விபத்தை பற்றிய தகவல்கள், இவர்களுடைய காருக்கு வந்துவிடும். இவர்கள் அந்த இடத்தை நெருங்கும்போது, ஒரு ஹெலிகாப்டர் நொறுங்கிய காரை அள்ளிக்கொண்டு கிளம்பும். பத்தே நிமிடத்தில், ஒரு துப்புரவு வண்டி அந்த இடத்தை துடைத்து தள்ளிவிடும். நிமிடங்களில் விபத்து நடந்த சுவடே இருக்காது.

இந்த கதையை அவர் எழுதியது, 70களில் இறுதியில். இது முழுமையான கற்பனை கதையாகவோ, விஞ்ஞான புனைவாகவோ இருக்காது என நினைக்கிறேன்.

இன்னும் இங்கு அந்தளவுக்கு வரவில்லையே என வருந்துவதைவிட, இப்பவாவது, இந்தளவுக்காவது வந்திருக்கிறதே என்று சந்தோஷம்தான் படவேண்டியிருக்கிறது.

Friday, June 11, 2010

சுறா - விஜய்க்கு மைல்கல்

சுறால ஒண்ணும் ஸ்பெஷலா கிடையாது. வேட்டைக்காரன் மாதிரிதான் என்று விஜய்யே சொன்ன பின்னாடி, படத்தை குறை சொல்வதில் அர்த்தமில்லை.

---



எந்த படம் வெளியானாலும், பதிவுலகத்தில் விமர்சன பதிவுகள் பொளந்து கட்டும். இதற்கு எதிர்பார்த்ததை விட கம்மி தான். ஒருவேளை, நிஜமாவே அவ்வளவு வரவேற்பு இல்லையோ? என்று நினைத்தால், தியேட்டர்களில் கூட்டமாக தான் இருக்கிறது. அதனால, படம் பார்த்துட்டு பார்த்தத வெளியே சொல்ல மக்கள் தயங்குறாங்க’ன்னு நினைக்குறேன். இப்படியொரு தனித்துவமான நிலையை இப்படம் தோற்றுவித்திருக்கிறது.

அப்படியே படம் பார்த்து, பதிவு எழுதியவர்களும் “ஏன் இந்த படம் பார்த்தோம்?” என்று முதலில் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்கிறார்கள். பிறகே, படத்தை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்கள். ஏதோ இயற்கைக்கு புறம்பான காரியத்தை செய்த குற்ற உணர்ச்சி, இவர்கள் எழுத்தில் தெரிகிறது.

இன்னொரு விஷயம். முன்ன, விஜய் படங்கள் வந்தவுடன் பார்த்தால், ஆச்சரியத்துடன் கேட்பார்கள். “(அதுக்குள்ள) பார்த்தாச்சா?” என்று. இப்பவும், அதே “பார்த்தாச்சா?” கேள்விதான். ஆனால், ஆச்சரியத்திற்கான காரணம் தான் வேறாக இருக்கிறது. சிலர், கூடவே அதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்கள்.

இப்படி பல வகையில், மாற்றங்கள் வந்து சேர்ந்திருக்கிறது, விஜய் படங்களுக்கு. விஜய்க்கு. விஜய்யின் திரையுலக வரலாற்றில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய மாற்றம். ஒரு மைல்கல்.

கிளாஸ் படங்கள் மட்டுமே பார்க்கும் பெண்களுக்கும், விஜய் பிடித்த நடிகராக இருந்தார். சமீபகாலமாக, விஜய் படங்களில் பயமுறுத்தும்படி வில்லன்கள் வருவதால், அழகான பெண்கள் தியேட்டர் செல்ல பயந்து தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது இந்த படமென்று இல்லை. கொஞ்ச காலமாகவே இருக்கிறது. இவர்கள் “விண்ணைத்தாண்டி வருவாயா” பார்த்துவிட்டு, அடுத்தது “ராவண”னுக்காக வெயிட் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தியேட்டர் வர, விஜய் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படியெல்லாம் வெளி உலகில் நடந்தாலும், தியேட்டரில் கூட்டம் தாறுமாறாகவே இருக்கிறது. ஒரு வார நாளில், செகண்ட் ஷோவுக்கு கூட பெங்களூரில் நான் பார்த்த தியேட்டரில் கூட்டமாகவே இருந்தது.

தியேட்டர் முன்னால் ஒட்டியிருந்த போஸ்டரில், பால் வடிந்த சுவடு, பால் அபிஷேகம் நடந்ததற்கு அத்தாட்சியாக இருந்தது. பேனரில் மேலே ரஜினி, சிரஞ்சிவி, ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர். ராஜ்குமார் காலைத் தொட்டு வணங்கும் விஜய்யை பேனராக வைத்திருந்தார்கள்.

---

இனி, படத்தில் விஜய்யை பற்றி....

1) படத்தில் விஜய் நன்றாக நீச்சல் அடித்திருக்கிறார்.
2) நன்றாக மீன் குழம்பு வைக்கிறார்.
3) வழக்கம்போல், நன்றாக ஆடியிருக்கிறார். விஜய் ரசிகர்களுக்காக, ஸ்பெஷல் போனஸாக. உருண்டு புரண்டு கஷ்டப்பட்டு ஆடவேண்டியதை, அநாயசமாக ஆடியிருக்கிறார்.
4) க்ளோசப் காட்சிகளில், விஜய் முகம் உருண்டையாக இருக்கிறது.

விஜய் நிறைய சென்டிமெண்ட் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். தனது வெற்றிப்படங்களில் இருந்த விஷயங்களை, தற்போது வரும் ஒவ்வொரு படங்களிலும் வைத்து பார்க்கிறார்.

---

டைட்டிலில் விஜய் பெயரையும், கலாநிதி மாறன் பெயரையும் ஒரே மாதிரி போடுகிறார்கள். கூடிய விரைவில், கலாநிதி மாறனுக்காக ஸ்பெஷல் டைட்டில் கிராபிக்ஸ் ரெடி செய்து விடுவார்கள் போலிருக்கிறது.

விளம்பரங்களில் கலாநிதி மாறனின் ‘க’ என்ற எழுத்தின் அளவுக்கு தான், விஜய்யின் முழு பெயர் அளவே இருக்கிறது.

---

எனக்கு படத்தில் பிடித்தவை,

1) கோர்ட் சீனில் விஜய், டீ.ஆர். போல் ”டண்டனக்கா டணக்குனக்கா” வசனம் பேசியது.
2) வெண்ணிற ஆடை மூர்த்தி மேடையில் பாடும்போது, வடிவேலு கீழே இருந்து கொடுக்கும் சைகை.
3) வில்லன் தமன்னாவை கடத்திக்கொண்டு வைத்துவிட்டு, போனில் வெறித்தனமாக பேசிக்கொண்டிருக்கும் போது, ஒண்ணும் தெரியாத பாப்பாவாக படிக்கட்டில் தமன்னா அமர்ந்திருப்பது.
4) படகை ரோட்டில் குறுக்காக நிறுத்தி வைத்துவிட்டு, ‘ஐயய்யோ! இது எப்படி இங்க வந்தது?’ என்று வடிவேலு அதிர்வது.

கையில இன்னும் ஒரு விரல் மிச்சமிருக்கு.

---

தெலுங்கில் ‘பொம்மாயி’ பாட்டை பார்த்தேன். தமன்னா இடுப்புக்காக தான், அந்த டவுசர் டான்ஸ் என்று நினைத்தேன். அனுஷ்காவுக்கும் அதே டான்ஸ் தான்.

---

பழைய தலைவர்களுக்கும், புது தலைவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

பழைய தலைவர்கள், ஒரு பேச்சுக்காவது “உங்களுக்காக உயிரை கொடுப்பேன்.” என்பார்கள். இப்ப, “எனக்காக உயிரைக்கொடுக்க ஒரு கூட்டம் இருக்கிறது” என்று தான் சொல்கிறார்கள்.

---

1) தியேட்டருக்கு வெளியே மசாலா மாங்காய் விற்றவருக்கு, எல்லாம் விற்று தீர்ந்ததில் சந்தோஷம்.
2) டிக்கெட் க்யூவுக்கு பக்கத்தில் உட்கார்ந்து, பார்வை இழந்த ஒருவர் பானையைத் தட்டி பாடிய பாடல்களுக்காக, அவர் முன் இருந்த துண்டில் நிறைய சில்லறைகள் விழுந்தது.
3) ரிலீஸான முதல் மூன்று நாட்களிலும், 50 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்க்கும், 100 ரூபாய் டிக்கெட்டை 200 ரூபாய்க்கும் விற்று, ப்ளாக்கில் டிக்கெட் விற்பவர் மகிழ்ச்சியாக இருந்தார்.
4) தியேட்டரில் முட்டை பப்ஸ் விற்றவர், நிறைய விற்றதில் மகிழ்ச்சியாக இருந்தார்.

நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்லை.

தஞ்சை - பிரகதீஸ்வரர் கோவில்

முதலாவதோ, இரண்டாவதோ படிக்கும் போது சென்றது. அதன் பிறகு, தஞ்சைக்கு இப்போது தான் செல்கிறேன்.



நான் சென்ற தினம், நல்ல கூட்டம். எல்லாம் பக்தி வரவழைத்த கூட்டம்.



கோவில்கள் வெறும் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. முக்கியமாக, நம்முடைய முன்னோர்களின் திறமையை பறைசாற்றும் சின்னங்கள்.



நிறைய சிறப்புகளை கொண்ட கோவில் இது. உயரமான கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி, தரையில் விழாத கலச நிழல் என.



இது போட்டோ ஷாப்பில் மெருகேற்றிய புகைப்படம்.



கோவிலில் நூதனமுறையில் இளநீர் சுமந்து செல்லும் ஒருவர்.



மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுதுறையின் வசம் இருப்பதால், கோவில் சுத்தமாக இருக்கிறது. புல் தரையில் மல்லாந்து படுத்து கிடந்து, கோபுரத்தை பார்ப்பதில் என்னா சுகம்?




கோவிலின் கோபுரத்தில் ஏறிய அனுபவத்தை ஒருவர் இங்கு பகிர்ந்திருக்கிறார். பாருங்கள்.

ராமேஸ்வரம்

ஒரு அதிகாலை வேளையில் ராமேஸ்வரம் வந்திறங்கினேன். எல்லா நேரங்களிலும், மக்கள் வந்திறங்கிக் கொண்டே இருக்கிறார்கள். கோவிலைச் சுற்றிலும் லாட்ஜுகள், விதவிதமான பெயர்களில், விதவிதமான வசதிகளுடன். வட இந்தியர்கள் அதிகம் வரும் இடமென்பதால், அந்தந்த மாநிலத்தவர்கள் நடத்தும் விடுதிகளும் உண்டு. இது எதுவுமே வேண்டாம். கடவுள் இருக்கிறார், கடல் இருக்கிறது என்று வெளிப்புறத்திலேயே உறங்குபவர்களும் உண்டு.



ராமேஸ்வரம் ஒரு தனித்தீவு. சாலை வசதி, ரயில் வசதி இரண்டுமே இருப்பதால், அந்த எண்ணம் ஏற்படுவதில்லை. இந்த ஊர் சொல்லும் புராணக்கதை சூப்பரானது. பேமஸானது. சர்ச்சைக்குள்ளானது. அதாவது ராமர் இங்கிருந்து தான் இலங்கைக்கு சென்று ராவணனுடன் போரிட்டு, சீதை மீட்டு வந்தார். அதற்காக, அவர் இலங்கைக்கு அமைத்த பாலம் இங்கிருந்து தான். பாலம் கட்ட உதவிய அணிலை, பரிவுடன் தடவி கொடுக்க, அதன் முதுகில் ஏற்பட்ட மூன்று கோடுகளைப் பற்றி தெரிந்திருக்குமே? அந்த அணிலுக்கு சொந்த ஊர், இதுதான்.



போரில் ராவணன் என்ற பிராமணனைக் கொன்றதால் உண்டான தோஷத்தைக் கழிக்க, இங்கு ஒரு லிங்கத்தை அமைத்து, பூஜிக்க வேண்டிய அவசியம் ராமனுக்கு ஏற்பட்டது. இதற்காக லிங்கத்தை கொண்டு வர அனுமனை ராமர் அனுப்ப, அவர் திரும்பி வர நேரமாகிவிட்டது. இந்த நேரத்தில், தன் கையாலேயே கடற்கரை மண் கொண்டு ஒரு லிங்கத்தை சீதை உருவாக்க, அந்த லிங்கத்திற்கே பூஜை செய்தார். திரும்பி வந்த அனுமனுக்கு வருத்தம்.

நம்ம கொண்டு வந்த லிங்கத்தை கண்டுக்கொள்ளவில்லையே? என்று. இதனால், அவர் தன் மன வருத்தத்தை ராமனிடம் சொல்ல, ராமன் அந்த மண் லிங்கத்தை அசைத்து பார்க்க சொல்ல, அனுமன் அசைத்து பார்த்து முடியாமல் போக, சீதை உருவாக்கிய மண் லிங்கத்தின் அருமை புரிந்தது. அது தான் ராமேஸ்வர கோவிலில் இருக்கும் லிங்கமாம். அனுமன் கொண்டு வந்த லிங்கமும் பக்கத்தில் இருக்கிறது.

இந்த கதையை கோவிலில் பெரிய பெரிய வண்ணப்படங்களாக வரைந்து வைத்துள்ளார்கள். ஸ்பான்சர்களுடன் தான். இந்த மாதிரி கோவிலில் படம் வரைந்து கதை சொல்லும் உத்தி எனக்கு பிடித்த விஷயம்.



கோவில் முழுக்க, ஊர் முழுக்க வட இந்தியர்கள் தான். அதுவும், வந்திருந்த பெரும்பாலோர் வசதியானோர் அல்ல. கூட்ட கூட்டமாக சென்றனர். இங்கிருந்து தனுஷ்கோடிக்கு சொற்ப பஸ்களே ஓடுகிறது. இவர்களுடைய ஒரு கேங் ஏறினால், பஸ் நிறைந்து விடுகிறது. கண்டக்டர், செக்கிங் இன்ஸ்பெக்டர், தெருவோர விற்பனையாளர்கள் அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள். கண்டக்டர், வட இந்தியர்களை உதாரணம் காட்டி, நம்மவர்களை பஸ்ஸில் ஒழுங்காக நிற்க சொல்கிறார். இந்த ரூட் பஸ்ஸை கொஞ்சம் அதிகம் விடலாம். அட்லீஸ்ட், தேவையான நேரங்களில் இருக்கும் கூட்டத்திற்கேற்ப. கூட்டமாக இருக்கிறதே என்று ஒரு பஸ்ஸை விட்டுவிட்டு, அடுத்த பஸ்ஸிற்காக இரண்டு மணி நேரம் காத்திருந்தேன்!



தனுஷ்கோடி. நமக்கு சமீபத்தில் வந்த சுனாமி பற்றி தான் தெரியும். இதே போல், 1964 வருட டிசம்பரிலும் ஒரு சுனாமி தமிழகத்தை தாக்கியது. அதில் தாக்குண்டு வெறும் மண் மேடாகி போன ஊர் தான், தனுஷ்கோடி. இந்த அழிந்த ஊரை சுற்றி பார்க்க, ஜீப்கள் வாடகைக்கு கிடைக்கிறது. இங்கு ஒரு பாழடைந்த தேவாலயத்தைக் காணலாம். இந்த ஊர் போகும் வழியில், சாலையில் இரு பக்கமும் கடலை காணலாம்.



பாம்பன் பாலம் என்றாலே அதை கட்ட உதவிய சிமெண்ட் தான் பலர் நினைவுக்கு வரும். அவர்கள் தான் அந்த பாலத்தை விளம்பரம் மூலம் பிரபலம் செய்தவர்கள். சமீபத்தில் மும்பை கடலில் கட்டப்பட்ட ராஜீவ் காந்தி பாலத்திற்கு, அன்னை இந்த இந்திரா காந்தி பாலம். பக்கத்திலேயே இருக்கும் ரயில் பாதை, பெரிய கப்பல்கள் செல்ல ஏதுவாக ஏற்றி இறக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கிறது. பஸ்ஸில் சென்றதால், இங்கு இறங்கி பார்க்க முடியவில்லை. பஸ்ஸில் இருந்தே எடுத்த போட்டோ.



இந்தியாவில் தரிசிக்க வேண்டிய 12 லிங்கங்களில், தமிழகத்தில் இருக்கும் ஒரே லிங்கம் ராமேஸ்வரத்தில் உள்ள கோவிலில் தான் அமைந்துள்ளது. மற்ற ஊர்களுக்கு போக முடிகிறதோ, இல்லையோ, பக்கத்தில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு போயிட்டு வந்துடுங்க.

சேது சமுத்திர திட்டத்திற்காக, அது தென் மாவட்டங்களுக்கு கொண்டு வரும் என்று சொல்ல பட்ட தொழிற் வாய்ப்புக்களுக்காக, எப்போது ஆரம்பிக்கும், நிறைவு பெறும் என்று துவக்கத்தில் எதிர்ப்பார்த்திருந்தேன். பிறகு, அதனால் கடலின் சுற்றுசுழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி சொல்லப்பட்டது. இன்னமும், அது பற்றிய உண்மை நிலை தெரியவில்லை. ஆனால், விஞ்ஞான ரீதியாக சொல்லப்படும் காரணங்களால் நிறுத்த முடியாமல் போன திட்டம், ராமர் பெயரை சொல்லி நிறுத்தப்பட்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ, எல்லா அரசுகளுமே கடவுளுக்கு பயப்படுகிறது. அட்லீஸ்ட், ஓட்டு வங்கி நம்பிக்கைக்காக.

இயக்குனர் நாடித்துடிப்பு - ஹரி

சில ஆண்டுகளுக்கு முன்பு படித்த பத்திரிக்கை செய்தி இது. இயக்குனர் ஹரி நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொல்ல, அதை நிராகரித்து அனுப்பிவிட்டார் இளைய தளபதி என்றது அந்த செய்தி. எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், இப்போது நாம் கேள்விப்படும் செய்தி உண்மை என்று உறுதியாக சொல்லமுடியும். விஜய் படங்கள் ஏற்படுத்திய நஷ்டத்தை ஈடுகட்ட, ஹரியின் படத்தை வெளியிடுகிறார்கள்.



தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த ஹரி, முதலில் இயக்குனர் பாலசந்தரிடம் சேர்ந்து, பிறகு இயக்குனர் சரணிடம் ‘அல்லி அர்ஜூனா’ வரை பணியாற்றினார். முதல் படம் - ‘தமிழ்’. முதல் படத்தை மதுரை பேக்ட்ராப்பில் எடுத்தவர், அடுத்தடுத்து தனது படக்குழுவினரையும், பிறகு திரையரங்கில் ரசிகர்களையும் ஊர் ஊராக தமிழகம் முழுக்க கூட்டி சென்றார். பேரரசு, படத்தலைப்புக்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை கவனிப்பார் என்றால், ஹரி கதைக்களத்திற்கு ஒரு ஊரை முடிவு செய்துவிட்டு மற்றதை பிறகு கவனிப்பார். படம் முழுக்க, ஊர் சம்பந்தப்பட்ட விஷயங்களை கதாபாத்திரங்கள் மூலம் பேசவிடுவார். படத்தலைப்பிலேயே ஒரு பாஸிட்டிவ்னெஸ் இருக்கும்.

சாமியில் திருநெல்வேலியையும், கோவிலில் நாகர்கோவிலையும், அருளில் கோயமுத்துரையும், ஐயாவில் தென்காசியையும் காட்டியவர், ஆறில் சென்னைக்கு வந்தார். அதற்கு பிறகு எடுத்த தாமிரபரணி, வேல், சேவல் படங்களுக்காக திரும்ப தெற்கேயே சென்றார். தற்போது, சிங்கமும் தூத்துக்குடி, திருநெல்வேலி வட்டாரங்களிலேயே எடுத்துள்ளார். தென்மாவட்டங்களில் அவருக்குரிய பரிச்சயங்களாலேயே, தொடர்ந்து அங்கு படமெடுப்பதாக காரணம் கூறியிருக்கிறார் ஹரி. (கவனிக்க: கதைக்களம் தான் வெவ்வேறு ஊர்கள். பெரும்பாலும் ஷூட்டிங் ஸ்பாட் - காரைக்குடி தான்.)

இதுவரை இவர் எடுத்த ஒன்பது படங்களில் சில தோல்வி படங்கள் இருந்தாலும், பெரும்பாலானவை வெற்றிப்படங்களே. தோல்விகளும் பெருமளவு தயாரிப்பாளர்களை பாதித்திருக்காது. ஏனெனில் திட்டமிட்டு படமெடுப்பதில் வல்லவர் இவர். சொன்ன தேதியில் படத்தை முடித்து, வெளியிடும் திறன் கொண்ட சொற்ப இயக்குனர்களில் ஒருவர் இவர்.

தயாரிப்பாளர்களிடையே, விநியோகஸ்தர்களிடயே நல்ல பெயர் இருந்தாலும், தீவிர தமிழ்ப்பட ரசிகர்களிடம் பிரபலமாக இருந்தாலும், பெரும்பாலோரின் பார்வையில் படாமல் இருக்கும் முன்னணி இயக்குனர் இவர். ஒருவகையில், இவருக்கு இது நல்லதாகவே அமைந்திருக்கிறது. இவர் படங்கள் அமைதியாக வெளியாகி, ஆர்பாட்டமாக ஓடும். சமீப காலங்களில், இது மாறி வருகிறது.

கலைஞர்கள் தங்கள் படைப்புகளைத் தாண்டி, மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது அவர்களது சில தனிப்பட்ட பண்புகளால் தான். ஹரியைப் பற்றி சொல்லும்போது, ஒருவர் விடாமல் அனைவரும் சொல்லும் விஷயம் - உழைப்பு & வேகம். ஒரு வேலையை எடுத்துக்கொண்டால், ராத்திரி பகல் என்று சிரமம் பார்க்காமல் செய்வது. இதனால் தான், தயாரிப்பாளர்கள் விரும்பும் இயக்குனராக தொடர்ந்து ஹரியால் இருக்க முடிகிறது. “பணம் முதலீடு செய்பவர்களை சந்தோஷப்படுத்தினால், ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த முடியும்” என்பது ஹரியின் எண்ணம். ரசிகர்களையும், முதலாளிகளையும் ஒருசேர திருப்தி செய்ய வேண்டுமென்பது நல்ல விஷயம் தானே?

கமர்ஷியல் படம் எடுப்பது ஒன்றும் தப்பான காரியமோ, சாதாரண காரியமோ அல்ல. அதற்கும் திறமை தேவை. ரசிகர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்ற எண்டர்டெயின்மெண்ட் லாஜிக் தெரிய வேண்டும். ஒரு மசாலா படமென்றால், சரியான விகிதத்தில், சரியான நேரத்தில் ஆக்‌ஷன் என்கிற காரத்தையும், காமெடி என்கிற இனிப்பையும், செண்டிமெண்ட் என்கிற உப்பையும் சேர்க்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் இதை சரியாக செய்பவர் ஹரி.

ஆறு படத்தில் அதிக காரத்தையும், சேவல் படத்தில் அதிக உப்பையும் சேர்த்துவிட்டதே அப்படங்களின் தோல்விக்கு காரணம். எப்பேர்ப்பட்ட சமையல்காரர் என்றாலும், சமயங்களில் கூட குறைய ஆகத்தானே செய்யும்?



இன்றைய தேதியில் எந்தவொரு ஹீரோவையும் தமிழ்நாட்டின் பட்டித்தொட்டியெங்கும் சிறப்பாக கூட்டி செல்லும் ஆற்றல் உள்ள இயக்குனர் - ஹரி. விஷால் ஒரு பேட்டியில் தன்னை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் கொண்டு சென்றது ஹரி தான் என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும், ஹரி இன்னமும் அடக்கமாக, புகழ் வெளிச்சத்தில் தலையை காட்டாமல், ஒளிந்து ஓடிக்கொண்டே இருக்கிறார்.

அவர் சமீபத்தில் ஆனந்த விகடன் பேட்டியில் கூறியிருப்பது, “ஹரி டைரக்‌ஷனை நம்பி யாரும் படம் பார்க்க வர்றதில்லை. ஹீரோக்களை நம்பித்தான் வர்றாங்க. நான் அவங்க முதுகுக்குப் பின்னாடி பதுங்கிட்டு பில்ட்-அப் கொடுக்குறேன்... அவ்வளவுதான். நான் பாரதிராஜா, பாலா, அமீர், செல்வராகவன் மாதிரி இல்லை. என்னை மட்டும் வெச்சுக்கிட்டு ஜெயிக்க என்னால் முடியாது. நான் காவிய டைரக்டர் கிடையாது. பெரிய கிரியேட்டரும் கிடையாது. அதனால கமர்ஷியல் படம் பண்றேன்.”

உண்மைதான். இன்னொரு உண்மை. இவரை வைத்து படம் பண்ணும் தயாரிப்பாளர்கள் அனைவரும், இவரை வைத்து அடுத்து ஒரு படம் எடுக்கவும் தயாராக இருப்பார்கள். இது எல்லா இயக்குனர்களுக்கும் அமைவதில்லை.

இவர் தன்னை பெரிய கிரியேட்டர் இல்லையென்று சொன்னாலும், இவருடைய திரைக்கதை சோர்வில்லாமல், வேகமாக செல்லும். சின்ன ட்விஸ்ட்டுகள், பின்பகுதியில் அமையும் முடிவுகளுக்கு ஏதுவாக முன்பகுதியில் வைக்கும் சம்பவங்கள் என சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது.

அதே சமயம், குறைகள் இல்லாமல் இல்லை. வசனங்கள் கவனம் பெற வேண்டும் என்பதற்காக இவர் அமைக்கும் வசனங்கள், ஆரம்பத்தில் செம பஞ்ச் ரகமாக இருந்து, சமீப காலங்களில் லொட லொடவென்று மாறியிருக்கிறது. ”ஒருச்சாமி, ரெண்டு சாமி” வசனத்திற்காக, ரஜினியை கைத்தட்ட வைத்தவராயிற்றே? (ரஜினி ஹரியிடம் கதை கேட்டார் என்றும், ஐயா கதையை தான் ஹரி ரஜினியிடம் சொன்னார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஹரியின் மாஸ்டர் பீஸ் என்று நான் கருதுவது, ஐயாவைத் தான்)

இன்னொரு குறை - இவர் படங்களின் பாடல்கள். சிறந்த ட்யூனை, தன் இசையமைப்பாளர்களிடம் இருந்து கறப்பவரல்ல ஹரி. அதுவா அமைந்தால் உண்டு என்ற ரகம் தான். இவருடைய வேகமே, இது போன்ற விஷயங்களில் நெகட்டிவ் காரணமாக அமைந்துவிடுகிறது என்று நினைக்கிறேன். தற்போது, பாடல்கள் வேறு எழுத ஆரம்பித்து இருக்கிறார்.

இவருடைய அனைத்து படங்களுக்கும் ப்ரியன் தான் ஒளிப்பதிவு. எந்த குறையும் சொல்லமுடியாத ஒளிப்பதிவாளர். விஜயக்குமார் வீட்டு மாப்பிள்ளை என்பதால், இவர் படங்களில் விஜயக்குமார் கண்டிப்பாக இருப்பார். சகலை ஆகாஷையும் காணலாம். அருண் விஜய்? ம்ஹும்! அதுக்கு இன்னும் காலமிருக்கு.

’அருவா இயக்குனர்’ என்னும் விமர்சனத்திற்கு, இவருடைய பதில் - ”கிராமத்து மக்களின் வன்முறை வெளிப்பாடு அருவாள்” என்பது தான். ஆனாலும், இவர் படங்களில் சண்டைக்காட்சிகளின் எண்ணிக்கை குறைவாக தான் இருக்கும். என்ன! சில படங்களில், ரத்தம் கொஞ்சம் ஓவராக சிந்தும். இவர் படங்களில் பறக்கும் கார் ஆக்‌ஷன் சீன்களுக்கு நான் ரசிகன். கார் வெடித்து மேலே பறக்காமல், ஐயா படத்தில் பக்கவாட்டில் பறந்து ஒரு பனை மரத்தில் மோதும். என்னே திங்கிங்! எனக்கும் தான் என்னே ரசனை!

எது எப்படியோ, பொழுதுபோக்கு படம் கொடுப்பதில் முக்கியமான இயக்குனர் - ஹரி. அதை மாஸ் எண்டர்டெயினராக கொடுப்பதில் முக்கியமானவர் - இயக்குனர் ஹரி.

பல வருடங்களுக்கு முன்பே, என் ப்ரொபைலில் ஹரியின் பெயரைப் போட்டுவிட்டு, இன்னமும் அவரைப் பற்றி ஒரு பதிவு போடாமல் இருந்தால் எப்படி? பதிவு போட்டாச்சு!

கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்குனர் நாடித்துடிப்பு இங்கு.

How To Care For Your Mouth With Diabetes

When you think about diabetes, you probably think about controlling your blood sugar, your insulin, and your weight. You might even think about things like taking care of your circulation and taking snacks with you. But do you think about your mouth?
Diabetics are more at risk for serious gum diseases, like periodontis (an advanced version of gingivitis) and thrush, a fungal infection. Both can cause soreness and cavities. With advanced periodontis, our gums start to pull away from your teeth and the pockets between the gums and teeth are filled with pussy infection (which, as you can imagine, does not really make your gum problem better).  Eventually, the infection can destroy the bone around your teeth and cause the teeth to fall out. Not a pretty picture.
Interestingly, there is a connection for people with diabetes and gum disease. People with diabetes have a greater chance of contracting gum disease generally because they are more susceptible to bacterial infections. This is especially bad because diabetics also have a harder time fighting off infections than people without diabetes.
What can you do to keep your teeth in the best possible health? Here are a few suggestions.
  • Make sure you're always taking care of your teeth. Brush, floss, use mouthwash and go to the dentist frequently.
  • Control your blood glucose levels, which will help you to fight off infections.
  • Avoid smoking to avoid fungal infections like Thrush.
  • Tell your dentist that you are diabetic and ask about products that might be especially helpful for you in fighting off gum disease. It's especially important to talk to your dentist about any changes in the condition of your gums quickly - while there's more time to take care of it.
  • If you wear dentures, remove and clean them daily to avoid infection in your mouth through them.
Keep in mind that any kind of infection can also wreak havoc on your blood glucose levels. Serious gum disease may cause blood sugar levels to rise, and anything that changes the way your body responds to glucose management makes controlling your diabetes more difficult.
Never forget that checking your blood sugar and eating right are important, but they aren't the only things that matter when you're managing your diabetes.

Installing A Pc Subwoofer

stalling a PC Subwoofer is as easy as choosing your favorite color. Subwoofers are a complete set of loudspeakers and are dedicated to low-pitched audio frequencies. If you have a desktop computer and a music lover, it is best that you have a subwoofer.



Go to a computer shop or electronic store to choose the best brands of subwoofers because the best brands are long lasting. Some of the subwoofers may cost between $200 and $300 minimum. Sometimes the best brands are expensive but if you want a cheaper one, you can just set it up yourself. In fact, there are also online auctions with self-help kit.



Subwoofers are very popular equipment because it gives deep, strong bass to your sound system. The subwoofers divert the notes that full-range speakers cannot reproduce. Subwoofers come in different sizes and shapes and some of its kind are unpowered, component subwoofer, plate subwoofer and a lot more.



How do you install a subwoofer?



1. Unpack the subwoofer and speakers.



2. Position the subwoofers on your desired place and note that you have to identify the left and right speakers. Be careful with where you are going to install the subwoofers, its best that you position the subwoofer at a safe place as well.



3. Shut down the computer and connect the cables of the speakers and the subwoofer. There is also a manual that will guide you with regards to where the cables should be attached. There are cables which are hired-wired to each other but there are cables that are not. Connect the jack of the speakers to the computer. Usually the jacks are color coded so all you have to do is to match the colors of the jack to the colors of the port at the back of the computer. The kit should also have an illustration of the wiring with its corresponding numbers. With this illustration, the installation will be easy to follow. 4. Plug the speakers to the power supply and turn on the speakers.



5. Start the computer.



6. Test the speakers by playing any music from your desktop computer.



Note that the subwoofer does not have a built-in amplifier so you need to hook it up with an external amplifier as a source of power. Also, although some subwoofers come separately, it is advisable that it is installed in an enclosed space to operate properly.



There are amplifiers used to power up your subwoofer. There are amplifiers that are solely designed for subwoofers and there are some that use a normal pro audio amplifier. The most commonly used amplifier is the plate amplifier which usually includes a crossover. The plate amplifier often times has the crossover mounted in the speaker enclosure.



A crossover separates the frequencies which the subwoofer does not receive. There are commercially available crossover materials which are mounted externally or simply buy a plate subwoofer. Most subwoofers are crossed over at 100 HZ and lower. The crossover points depend on the main speakers and as well as the room where the speakers are setup.