Friday, June 11, 2010

தஞ்சை - பிரகதீஸ்வரர் கோவில்

முதலாவதோ, இரண்டாவதோ படிக்கும் போது சென்றது. அதன் பிறகு, தஞ்சைக்கு இப்போது தான் செல்கிறேன்.



நான் சென்ற தினம், நல்ல கூட்டம். எல்லாம் பக்தி வரவழைத்த கூட்டம்.



கோவில்கள் வெறும் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. முக்கியமாக, நம்முடைய முன்னோர்களின் திறமையை பறைசாற்றும் சின்னங்கள்.



நிறைய சிறப்புகளை கொண்ட கோவில் இது. உயரமான கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி, தரையில் விழாத கலச நிழல் என.



இது போட்டோ ஷாப்பில் மெருகேற்றிய புகைப்படம்.



கோவிலில் நூதனமுறையில் இளநீர் சுமந்து செல்லும் ஒருவர்.



மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுதுறையின் வசம் இருப்பதால், கோவில் சுத்தமாக இருக்கிறது. புல் தரையில் மல்லாந்து படுத்து கிடந்து, கோபுரத்தை பார்ப்பதில் என்னா சுகம்?




கோவிலின் கோபுரத்தில் ஏறிய அனுபவத்தை ஒருவர் இங்கு பகிர்ந்திருக்கிறார். பாருங்கள்.

No comments:

Post a Comment