Tuesday, June 22, 2010

திருச்செந்தூர் போகலாம்... வாங்க...

ஒருநாள் திருச்செந்தூர் போகலாம்னு கிளம்பினேன். போனபோது எடுத்த புகைப்படங்களின் பகிர்தலே இந்த பதிவு. போன ரூட் : தூத்துக்குடி – திருச்செந்தூர்.

மொதல்ல இது ஒரு Dry ஆன ஏரியான்னு பொதுவா நினைப்பாங்க. ஆனா போற வழி எல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளா பார்த்திட்டு போகலாம்.



தூத்துக்குடில கடல் இருக்கு. உப்பளங்கள் இருக்கு. ஆனா உப்பு தயாரிக்க பயன்படுத்தற தண்ணிர், நிலத்தடி நீர்.


இப்ப நிறைய உப்பளங்கள் மூடப்பட்டு வருவதாக கேள்விப்பட்டேன்.



இப்படி உப்பளமாக இருக்குற வழி, சட்டுனு வாழைமரம் நிறைந்த வழியா மாறுது.




இதுக்கு தேவையான நீரை வழங்குவது, தாமிரபரணி ஆறு. இதன் கரையோரம் ஆத்தூர், ஏரல், உமரிக்காடுன்னு நிறைய ஊர்கள், கிராமங்கள் இருக்கிறது.




இங்க ஆறுமுகநேரி, காயல்பாட்டினம் போன்ற ஊர்களைக் கடக்கும் போது வழியெல்லாம் பச்சப்பசேலேன்னு வயல்வெளிகள் உள்ளது.


இங்க இருக்குற குலசேகரபட்டினம்ங்கற ஊர், தசரா திருவிழாவுக்குப் பிரபலம். அப்ப பல ஊர்களில் இருந்து விதவிதமான வேடங்களில் வரும் பக்தர்கள் இங்க உள்ள கோவிலில் கூடுகிறார்கள்.

திருச்செந்தூருக்கு முன்னால் உள்ள காயல்பட்டினம் என்ற ஊரில் இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.



திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகும். இந்த ஒரு முருகன் கோவில் மட்டும்தான் கடலோரத்தில் அமைந்துள்ளது.




கடலுக்கு மிகவும் அருகில் அமைந்து இருங்தாலும் சுனாமியின் போது இந்த கோவிலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அந்த சமயம் கடல் உள்வாங்கி, கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரிந்தது.



சிலர் கடவுளை கோவில், சிலைகளில் காண்கிறார்கள். சிலர் இயற்கையில் கடவுளை காண்கிறார்கள். இந்த இரண்டு வகையினருக்குமே திருச்செந்தூர் மனத் திருப்தியைக் கொடுக்கும்.


இக்கோவிலைப் பற்றி மேலும் அறிய இங்கே (http://tiruchendur.org/) சொடுக்கவும்

No comments:

Post a Comment